திருவாரூர்: வேன்-லாரி மோதலில் 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பலியாயினர். மேலும் 23 பேர் காயமடைந்தனர்.

திருவாரூர் அலங்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

உப்பூர் கிராஸ் அருகே வேன் வந்தபோது எதிரே சிமெண்ட் மூடைகள் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் 5 பெண்கள், ஒரு சிறுமி, வேன் டிரைவர் செந்தில் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

காயமடைந்த மேலும் 23 பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தேமுதிக தொண்டர் விபத்தில் பலி:

இதற்கிடையே கயத்தாறு அருகே இன்று காலை நடந்த சாலை விபததில் தேமுதிக தொண்டர் பலியானார்.

தேமுதிக மகளிர் அணி மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திசையன்விளை பகுதியை சேர்ந்த அக்கட்சியினர் 17 பேர் ஒரு வேனில் சென்றனர். மாநாடு முடிந்ததும் நள்ளிரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

கயத்தாறு அடுத்த ராஜபுதுக்குடி அருகே வந்துகொண்டிருந்தபோது, நிலை தடுமாறிய வேன் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் வேனில் இருந்த ஒருவர் இறந்தார்.

16 பேர் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+