எஸ்ஐயை தாக்கிய விடுதலை சிறுத்தை பிரமுகர் கைது
செங்கோட்டை: செங்கோட்டை போலீஸ் எஸ்ஐயை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டை காவல் நிலைய எஸ்ஐ ஆடிவேல், தலைமை காவலர் முருகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேருந்து நிலைய வாளகத்தில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் செங்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் சிலர் மதுரையில் நடைபெறும் மகளிர் தின மாநாடு போஸ்டர்களை ஒட்டினர்.
இதைபார்த்த எஸ்ஐ ஆடிவேல், அரசு சுவற்றில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று அவர்களிடம் கூறினார். இதனால் கோபமடைந்த செல்வம், எஸ்ஐயின் கழுத்தை நெரித்தார்.
பதறிய ஏட்டு முருகன், செல்வத்திடம் இருந்து எஸ்ஐ ஆடிவேலை மீட்டார்.
பின்னர் செல்வத்தை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். செல்வத்தின் மீது எஸ்ஐ ஆடிவேல் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயசுப்பிரமணியன் வழககுபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications