தமிழகத்துக்கு ஜப்பான் ரூ. 1,178.39 கோடி-ப.சி முன்னிலையில் ஒப்பந்தம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் இரு திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 1,178.39 கோடி நிதியுதவி அளிப்பது தொடர்பான நிதிப் பரிமாற்ற ஒப்பந்தம் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.
இந்தியாவிற்கான ஜப்பானிய தூதர் டோமிச்சியும், மத்திய நிதித்துறை இணைச் செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவும் இதில் கையெழுத்திட்டனர்.
நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ரூ. 853.39 கோடியும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டுமானத் திட்டத்துக்கான ரூ. 325 கோடியும் அடங்கும்.
இவை தவிர இந்தியாவில் மேலும் 5 திட்டங்களுக்கு ஜப்பான் ரூ. 6,500 கோடி வரை நிதியுதவி வழங்கும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.












Click it and Unblock the Notifications