பாகிஸ்தான்-2 குண்டு வெடிப்புகளில் 18 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லாகூர் : பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 2 குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாயினர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
லாகூரி்ல் காவல்துறை புலனாய்வு மையத்திலும், மாடல் டவுன் பகுதியிலும் இன்று காலை 10 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இதில் புலனாய்வு மைய அலுவலகத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் அந்த அலுவலகமும் பலத்த சேதமடைந்தது. பார்க்கிங் பகுதியில் இந்த கு்ண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதில் 50 கார்களும் எரிந்து நாசமாயின.
லாகூர் மாடல் டவுனில் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் இரண்டு குழந்தைகள் இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications