For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடலூரில் திமுக மகளிர் அணி 2 நாள் மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க. மகளிர் அணி மாநாடு வரும் மே மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கடலூரில் நடக்கிறது.

கடலூர் பெரியார் வளாகம் அண்ணாநகரில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தி.மு.க. துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் தலைமை தாங்குகிறார். மகளிர் அணி தலைவி சங்கரிநாராயணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். வசந்தி கணேசன் மாநாட்டு கொடியை ஏற்றி வைக்கிறார்.

மாநாட்டையொட்டி 24-ந்தேதி பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. பேரணியை நூர்ஜகான் பேகம் தொடங்கி வைக்கிறார். மாநாட்டை சிறப்பாக நடத்த அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் மகளிர் அணி ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான திமுக மகளிர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். பத்து லட்சம் பேரை மாநாட்டுக்குத் திரட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். இதற்காக மாவட்ட வாரியாக மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த 9ம் தேதி திருச்சியில் தேமுதிக மாபெரும் மகளிர் பேரணி-பொதுக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X