நெய், பால்கோவா உற்பத்தியை குறைத்த ஆவின்
சேலம்: பால் பற்றாக்குறையால், பால் சார்ந்த பொருட்களான நெய், பால்கோவா ஆகியவற்றின் தயாரிப்பை சேலம் ஆவின் நிறுவனம் குறைத்து விட்டதாம்.
தமிழ்நாடு முழுவதுமுள்ள 7500 பால் கூட்டுறவு சங்கங்களில் 4.50 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களின் கவர்ச்சி அறிவிப்புகளால் பால் உற்பத்தியாளர்களில் பெரும்பாலும் தனியார் பக்கம் திரும்பிவிட்டனர். சேலம் ஆவின் நிறுவனத்தில் கடந்த 9 மாதங்களுக்கு முன் 4.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, அது 3.50 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது.
உள்ளூர் தேவைக்கு போக மீதி பால் சென்னை ஆவின் இணை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படுகிறது. பால் விற்பனை மட்டுமின்றி, நெய், பால்கோவா, ரசகுல்லா, முந்திரி கேக் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களும், பால் பவுடரும் தயாரித்து விற்கப்படுகின்றன.
பாலின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இப்பொருட்களின் உற்பத்தியில் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications