சிபிஎம் வேட்பாளர் ரங்கராஜன் வேட்பு மனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வசந்தி ஸ்டான்லி, ஏ.ஏ.ஜின்னா மற்றும் அதிமுக வேட்பாளர் பாலகங்கா ஆகியோர் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர்.
இந்த நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி செல்வராஜிடம் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களான ஜி.கே.வாசனும், ஜெயந்தி நடராஜனும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது. நாளைதான் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட வாய்ப்பை அக்கட்சி ஏற்காமல் நிராகரித்து விட்டதால், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுமா என்ற குழப்பம் நிலவுகிறது. ஒரு வேளை போட்டியிட அதிமுக முடிவு செய்தால், மார்ச் 26ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். இல்லாவிட்டால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.