திருச்சி அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 50 வயதுப் பெண் உள்பட 2 பேர் பலியானாரக்ள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
வீராப்பூர் என்ற கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு அக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வேன் மூலம் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த வேன் திருச்சி அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து மோதியது.
இதில், பாப்பம்மாள் மற்றும் வேன் டிரைவர் சீனிவாசன் ஆகியோர் பலியானார்கள். இருவரும் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
காயமடைந்த 25 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications