ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி, காஸியாபாத், ஹாபூர் ஆகிய ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தீவிரவாதிகள் பெயரில் வந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து பாதுகாபுப் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உ.பி. மாநிலம் ஹாபூர் ரயில் நிலைய கண்காணிப்பாளருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் டெல்லி, காஜியாபாத், ஹாபூர் ரயில் நிலையங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தீவிரவாத அமைப்பின் பெயரில் இந்த கடிதம் வந்தது. இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்தக் கடிதத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது அது போலியான மிரட்டல் கடிதமாக இருக்கலாமோ என்று போலீஸாருக்கு சந்தேகம் வந்தது.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மூன்று ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications