ஸ்வீடனில் தஞ்சமடைகிறார் தஸ்லிமா நஸ்ரின்

Subscribe to Oneindia Tamil

Taslima
டெல்லி: டெல்லியில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிம் நஸ்ரின், இந்தியாவிலிருந்து வெளியேறி, ஸ்வீடனில் தஞ்சமடைகிறார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லிமா நஸ்ரின், கொல்கத்தாவில் வசித்து வந்தார். ஆனால் அவருக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. இதையடுத்து கொல்கத்தாவிலிருந்து வெளியேறிய அவர் ராஜஸ்தானுக்கு சென்றார்.

ஆனால் ராஜஸ்தானில் அவரைத் தங்க வைத்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று யோசித்த ராஜஸ்தான் மாநில அரசு அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்தது.

இதையடுத்து மத்திய பாதுகாப்புப் படையினர், தஸ்லிமாவை ரகசிய இடத்தில் தங்க வைத்தனர். அவர் எங்கும் வெளியேறக் கூடாது என தடை விதிக்கப்பட்டது.

வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளாகவும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை எனவும் தஸ்லிமா வருத்தப்பட்டுக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்வீடன் அரசு, தனது நாட்டுக்கு தஸ்லிமா வரலாம் என அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை தஸ்லிமா ஏற்றுக் கொண்டுள்ளார். இன்று இரவு அவர் ஸ்வீடன் புறப்பட்டுச் செல்லவுள்ளார். அங்கு புகலிடம் பெறும் தஸ்லிமா, சிகிச்ைச பெறவும் திட்டமிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+