ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு
சென்னை: ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்க தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. தாய்-சேய் நலனுக்காக சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
கர்ப்பிணிப் பெண்கள் சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்யும்போது பல மணி நேரம் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியுள்ளது.
இதனால் காலையில் சாப்பிட்டுவிட்டு வரும் கர்ப்பிணி பெண்கள் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு மதிய வேளையில் பசியுடன் திரும்ப வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த திட்டம் வேலூர் மாவட்டத்தில் உள்ள சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல குழந்தை பிறந்த பிறகு சுகாதார மையத்தில் தங்கியிருக்கும் பெண்களுக்கு, அவர்கள் வீடு திரும்பும் வரை உணவு வழங்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிகளுக்கான உணவு சுகாதார நிலையங்களிலேயே தயாரிக்கப்படும். சமைக்க வசதியில்லாத நிலையங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உதவியைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications