நக்சல்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு பயிற்சி
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: நக்சலைட்களை பிடிக்க அதிரடிப்படையினருக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தமிழகத்தில் நக்சலைட்டுகள் வனப்பகுதிகளை தங்களது செயல்பாட்டிற்காக பயன்படுத்தி வருகின்றனர். போலீசாரைத் தாக்கி துப்பாக்கிக் கொள்ளையிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து வனப்பகுதிகளை சோதனையிட்டு, அவர்களை பிடிப்பதற்காக சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் எஸ்ஐ முத்துமாணிக்கம், நீலகண்டன், பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான 20 போலீசார் கொண்ட அதிரடிப்படையினர் கடந்த 2 தினங்களாக செங்கோட்டையை அடுத்த கண்ணுபுளிமெட்டு, மோட்டையில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டனர்.
வனப்பகுதிகளில் பாதுகாப்பாக இருப்பது, எதிரியை தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications