கேபிள் டிவியில் பலான படம்-கலெக்டரிடம் புகார்
திருச்சி: திருச்சி அருகே உள்ள துவரங்குறிச்சியில் கேபிள் டிவியில் கிளுகிளு படங்கள் காட்டப்பட்டதால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
துவரங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி நிறுவனம் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கு சானல்களை ஒளிபரப்பி வருகிறது.
இந்த கேபிள் டிவி நிறுவனம் உள்ளூர் அளவில் ஒரு டிவியையும் நடத்தி வருகிறது. அக்கம் பக்கத்து கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் இதில் ஒளிபரப்பாகுமாம். அப்படியே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவில் ஆபாசப் படத்தையும் போட்டு வருகின்றனர்.
நள்ளிரவுக்கு மேல் இந்த மிட் நைட் மசாலா படங்கள் போடப்படுமாம். இதனால் மணப்பாறை, விராலிமலை, தோகைமலை உள்ளிட்ட பல ஊர்களிலிருந்தும் துவரங்குறிச்சிக்கு வந்து தவறாமல் படம் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனராம் இளைஞர்கள்.
இதனால் துவரங்குறிச்சி மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் வேதனை அடைந்தனர். கேபிள் டிவி நிறுவனத்தின் இந்த செய்கை குறித்து போலீஸில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எதுவும் இல்லை. இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சவுண்டையாவிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications