இலங்கைக்கு அமெரிக்கா ஆயுத உதவி
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு உதவியாக அமெரிக்கா சில அதி நவீன கருவிகளையும், வெடிபொருட்களையும் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதி நவீன வெடிபொருட்கள், குண்டுவெடிப்பு தடுப்பு சாதனங்கள், கடத்தப்பட்டவர்களை மீட்க உதவும் சில பொருட்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா, இலங்கைக்குக் கொடுத்துள்ளது.
இந்த உதவியை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளதாக இலங்கை நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சாதனங்கள் இலங்கை போலீஸாருக்கும், சிறப்பு அதிரடிப்படையினருக்கும் பிரித்து வழங்கப்படும் என இலங்கை கூறியுள்ஏளது.
கடந்த 1983ம் ஆண்டு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. தாக்குதல் எதிர்ப்பு, தடுப்பு மற்றும் தேடுதல் வேட்டைக்காக இந்த படை உருவாக்கப்பட்டது.
இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்காவின் புதிய உதவி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.