பட்ஜெட்-இரவிலும் பணியாற்றிய கருணாநிதி
சென்னை: முதல்வர் கருணாநிதி நேற்று இரவு தலைமைச் செயலகம் வந்து பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தது அரசு ஊழியர்களுக்கு பெரும் வியப்பைக் கொடுத்தது.
இளைஞர்களுக்கு இருப்பதை விட பல மடங்கு சுறுசுறுப்பு, வேகம், விவேகம் முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. ஆனால் நேற்று இரவு அவர் தலைமைச் செயலகம் வந்து பணியாற்றியதை அரசு ஊழியர்கள் பெரும் வியப்புடன் பேசிக் கொள்கின்றனர்.
இன்று காலை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு நேற்று இரவு தலைமைச் செயலகத்தில் இறுதி வடிவம் கொடுத்தார் முதல்வர் கருணாநிதி.
இரவு 9 மணிக்கு கோட்டைக்கு வந்த முதல்வர் கருணாநிதி, பட்ஜெட் பிரதியை முழுக்க ஒருமுறை படித்துப் பார்த்தார். சில திருத்தங்களையும் பரிந்துரைத்தார். இறுதியில் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அலுவலகத்தில் இருந்து பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுத்தார் முதல்வர்.
முதல்வர் பார்த்து ஓ.கே. செய்த பின்னர் பட்ஜெட்டை அச்சிடும் பணி தொடங்கியது. இரவு முழுவதும் பட்ஜெட் அச்சிடும் பணி முனைப்புடன் நடந்தது.












Click it and Unblock the Notifications