உடலில் தீயுடன் ஓடிய நடிகை மரணம்
சென்னை: சென்னையில் உடலில் பற்றி எரியும் தீயுடன் ஓடிய நடன நடிகை சிகிச்ைச பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார்.
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் திரைப்படங்களில் குழு நடனத்தில் இடம் பெற்று ஆடி வரும் நடன நடிகை ஆவார். 2 நாட்களுக்கு முன்பு 10 மணியளவில் ஷூட்டிங் போய் விட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நள்ளிரவில் உடலில் பற்றி எரியும் தீயுடன் சங்கீதா வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். நடு ரோட்டில் அவர் தீயுடன் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலறியபடி அங்குமிங்கும் ஓடிய சங்கீதாவின் மீது அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் பாதி உடல் கருகிய நிலையில் சங்கீதா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த சங்கீதாவிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது, வறுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார் சங்கீதா. தனது சொந்த ஊர் சேலம் எனவும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் அவர் சுய நினைவை இழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications