ராகுல் மிகச் சிறந்த தலைவராவார்: டோனி பிளேர்
டெல்லி: உலகிலேயே மிகச் சிறந்த, திறமையான அரசியல்வாதியாக ராகுல் காந்தி திகழ்கிறார் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேர் புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி வந்துள்ள டோனி பிளேர், ராகுல் காந்தியை சந்தித்தார். இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியை டோனி பிளேர் சீரமைத்த விதம் குறித்து அப்போது ராகுல் காந்தி ஆர்வத்துடன் கேட்டறிந்தார். டோனி பிளேரும் தனது செயல்பாடுகள், அணுகுமுறைகள் உள்ளிட்டவற்றை ராகுலிடம் எடுத்துரைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிளேர் பேசுகையில், இந்தியாவின் அடுத்த பிரதமராகும் முழுத் தகுதியும் ராகுல் காந்தியிடம் உள்ளது. அவரது தலைமுறையில் மிகவும் சிறந்த, திறமையான, தொலைநோக்குப் பார்வை கொண்ட இளம் தலைவராக, அரசியல்வாதியாக விளங்குகிறார் ராகுல் காந்தி.
உலக அளவில் நான் பார்த்த இளம் அரசியல்வாதிகளிலேயே என்னை மிகவும் கவர்ந்துள்ளார் ராகுல் காந்தி.
அவரிடம் முதல் தரமான மனது உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் அவர் தீவிர அக்கறையுடனும், ஆர்வத்துடனும் உள்ளார்.
நிச்சயம் இவரால் எதையும் சாதிக்க முடியும். மிகச் சிறந்த தலைவராக ராகுல் காந்தி உருவெடுப்பார் என்று புகழாரம் சூட்டினார் பிளேர்.
--












Click it and Unblock the Notifications