கன மழையால் மேட்டூர் அணைக்கு கிடுகிடு நீர் வரத்து
மேட்டூர்: கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.67 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும்.
அணைக்கு விநாடிக்கு 4486 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுவையில் பேய் மழை:
புதுவையில் இன்று காலை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. புதுவையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கிக் கிடக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 5.2 செமீ மழை புதுவையில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications