மழை நிவாரண பணிகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு
சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்காக உடனடியாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சபாநாயகர் ஆவுடையப்பனும் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை, வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சபாநாயகரின் ஒப்புதலுடன் வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பேரவைக் கூட்டத்தை ஒத்திவைத்து, அன்றைய தினங்களில் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட திட்டமிடப்பட்டுள்ளது.
பயிர் சேதம் - ஹெக்டேருக்கு ரூ. 4,000:
இதேபோல மழை வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்குரிய இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 4000 இழப்பீடு தரப்படும்.
தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 1500 கோடி தேவை என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் அது வந்து சேரும் என்று நம்புகிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.
2 நாட்களுக்குப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு:
இதற்கிடையே, அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் மழை பாதித்த பகுதிகளுக்கு செல்ல வசதியாக 2 நாட்களுக்கு சபைக் கூட்டத்ைத ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் ஆவுடையப்பன் ஆலோசித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளை அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் பார்வையிட வசதியாக இரு நாட்களுக்கு பேரவைக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.
இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் விதி எண் 26(2)ன் கீழ், 24.3.2008 மற்றும் 25.3.2008 ஆகிய இரு தினங்களுக்கு பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications