சூனியம் வைத்ததாக குவைத்தில் இந்தியர் கைது
Subscribe to Oneindia Tamil
துபாய்: பில்லி, சூனியம் உள்ளிட்ட பிளாக் மேஜிக் வேலைகளில் ஈடுபட்டதாக குவைத்தில், இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத்தின் ரிக்கா என்ற இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை.
சம்பந்தப்பட்ட இந்தியர் பில்லி, சூனியம், மாயம், மந்திரம், ஏவல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரைக் கையும் களவுமாக பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
போலீஸ்காரர் ஒருவரை மாறு வேடத்தில் அவரிடம் அனுப்பினர். அவரிடம் இந்திய மந்திரவாதி சூனியம் குறித்து கூறியபோது அவரைக் கைது செய்தனர் போலீஸார்.
அவரிடமிருந்து அவரிடம் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் பெயர் பட்டியலையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications