புதுவை காங். தலைவர் சண்முகம் திடீர் மாற்றம்
டெல்லி: புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த ப.சண்முகம் திடீரென மாற்றப்பட்டுள்ளார். புதிய தலைவராக முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த 25 ஆண்டு காலம் பதவி வகித்து வந்தவர் சண்முகம். இந்த நிலையில் அவரை மாற்றிய காங்கிரஸ் மேலிடம், புதிய தலைவராக ஏ.வி.சுப்ரமணியனை நியமித்துள்ளது.
காரைக்கால் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் வரலாறு காணாத வகையில் கோஷ்டிப் பூசல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவரை கட்சி மேலிடம் மாற்றியுள்ளது. சண்முகத்தால் கோஷ்டிப் பூசலை சுத்தமாக தடுக்க முடியாத நிலையில் (அவரே ஒரு கோஷ்டிக்குத் தலைவர்), ஏ.வி.சுப்ரமணியன் எந்த அளவுக்கு இதில் சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.
சுப்ரமணியத்தின் நியமனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கூடுதல் பலன் கிடைத்துள்ளது. காரைக்காலை காங்கிரஸ் அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அங்கு ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளதால் காரைக்கால் பிராந்திய மக்களைக் கவர முடியும் என காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது.












Click it and Unblock the Notifications