மீண்டும் கன மழை; இடி மின்னல்-சென்னை ஸ்தம்பிப்பு

Subscribe to Oneindia Tamil

Lightning
சென்னை: சென்னை நகரில் இன்று காலை பயங்கர இடி, மின்னலுடன் மீண்டும் மிக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.

அரபிக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் வலுவிழந்த நிலையிலும் மழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆனால், நேற்று முதல் சென்னை நகரில் மழை இல்லை. இந் நிலையில் இன்று காலை நல்ல வெயில் அடித்தது. ஆனால் 12 மணியளவில் நிலைமை தலைகீழாக மாறியது.

வேகமாக இருட்டி வந்த வானம், சிறிது நேரத்தில் பலத்த மழையைக் கொட்டி நகரையே ஸ்தம்பிக்க வைத்தது. கடந்த ஒரு மணி நேரமாக கனத்த மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக மாற்றியுள்ளது.

மழையுடன் பலத்த இடியும், மின்னலும் நகரையே நடுங்க வைத்து வருகிறது. இதுவரை இந்த அளவுக்கு இடியும், மின்னலும் இல்ைல என்று கூறும் அளவுக்கு நகரமே நடுக்கத்துடன் காணப்படுகிறது.

மழையும், இடியும், மின்னலுமாக இருப்பதால் சென்னை நகரம் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. முக்கியச் சாலைகளில் போக்குவரத்து அடியோடு குறைந்து காணப்படுகிறது. சாலைகளில் தண்ணீர் வெள்ளமென ஓடிக் கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+