ஓகனேக்கலில் தமிழக அனைத்துக் கட்சிகள் 26ம் தேதி போராட்டம்
பென்னாகரம்: ஓகனேக்கலில் கன்னட அமைப்புகள் தேவையில்லாமல் உரிமை கொண்டாடி போராட்டம் நடத்தி வருவதைக் கண்டித்து அங்கு 26ம் தேதி அனைத்துக் கட்சிகள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஓகனேக்கல் தங்களுக்கே சொந்தம், அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கோரி கன்னட அமைப்புகள் தினசரி போராட்டம் நடத்தி வருகின்றன. அத்துமீறி தமிழக பகுதிக்குள் நுழைந்து சலசலப்பை ஏற்படுத்தி வருவதால் ஓகனேக்கலில் பதட்டம் நிலவுகிறது.
இந்த நிலையில், நேற்று பென்னாகரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கன்னட அமைப்புகள், அரசியல் கட்சிகளின் போக்கைக் கண்டித்து வருகிற 26ம் தேதி ஓகனேக்கலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
பந்த் நடத்தவும் முடிவு:
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமல் நீளுமானால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பந்த் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், கன்னடர்கள், அத்துமீறி தமிழகப் பகுதிக்குகள் நுழையால் தமிழகப் போலீஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.