துபாயில் உலகின் மிகப் பெரிய நீர்த்தேக்கம்
துபாய்: உலகிலேயே மிகப் பெரிய நீர்த் தேக்கம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது.
உலகின் மிகப் பெரிய கட்டுமானப் பணிகள் பல துபாயில் நடந்து ஏற்கனவே சாதனைகளைக் குவித்து வரும் நிலையில் இன்னொரு சாதனையும் துபாயின் பெருமைப் பட்டியலில் சேருகிறது.
உலகிலேயே மிகப் பெரிய கான்க்ரீட் நீர்த் தேக்கம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 168.6 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த நீர்த்தேக்கம், மொத்தம் 3 பிரிவுகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் 6 கோடி காலன் கொள்ளளவு கொண்டதாகும்.
இது அமெரிக்காவின் சான்டியோகாவில் உள்ள எர்ல் தாமஸ் நீர்த்தேக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இங்கு தற்போது 3.5 கோடி காலன் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதுதான் உலக சாதனையாக உள்ளது. அதை துபாய் நீர்த்தேக்கம் முறியடிக்கவுள்ளது.
துபாயின் முஷ்ரிப் என்ற இடத்தில் இந்த நீர்த்தேக்கங்கள் அமையவுள்ளன. மொத்தம் 16.5 ஹெக்டேர் பரப்பளவில் இவை கட்டப்படவுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த மம்முத் குழுமமும், ஜெர்மனியின் மேக்ஸ் போகல் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளன.
15 மாதங்களில் இதுதொடர்பான கட்டுமானப் பணிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications