பயிற்சி முகாமில் ஐஜி ஆய்வு- 2 பெண் போலீசார் மயக்கம்
நெல்லை: பாளையில் நடைபெறும் பெண் காவலர்களுக்கான பயிற்சி முகாமை ஐஜி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 பெண் போலீஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 234 இரண்டாம் நிலை பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அணிவகுப்பு மற்றும் சட்டம் குறித்த இந்த பயிற்சிகள் 7 மாதங்கள் நடக்க உள்ளன. இதுபோல தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி பயிற்சி மையத்திலும் போலீசாருக்கான பயிற்சி நடக்கிறது. ஐஜி ராஜேந்திரன் இந்த இரண்டு மையங்களிலும் திடீரென ஆய்வு செய்தார்.
பாளை ஆயுதப்படை பயிற்சி முகாமில் அணிவகுப்பு மற்றும் வகுப்புகளை பார்வையிட்டார்ர். பின்னர் ஓட்டப் பந்தயம் நடந்தது. அப்போது 2 பெண் காவலர்கள் தீடீரென மயங்கி விழுந்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் முதலுதவி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications