'பண மோசடி' ஜக்மோகன் டால்மியா கைதாகி விடுதலை
மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா திடீரென கைது செய்யப்பட்டார். ஆனால் ஏற்கனவே அவர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக டால்மியா இருந்தபோது ரூ. 2.90 கோடி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது மும்பையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில், நேற்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தனது வழக்கறிஞருடன் மும்பை வந்த டால்மியா, பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு சென்றார். அப்போது போலீஸார் அவரை திடீரெனக் கைது செய்தனர் அவருடன், டால்மியாவின் செயலாளர் செளத்ரியும் கைது செய்யப்பட்டார்.
ஆனால் இருவரும் ஏற்கனவே முன்ஜாமீன் பெற்றிருந்ததால் ரூ. 25, 000 ரொக்க ஜாமீனில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications