வருசநாடு 4 நக்ஸல்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
தேனி: தேனி மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 நக்ஸல் தீவிரவாதிகளை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நக்ஸைலைட் தீவிரவாதிகள் முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம், யோகேஷ் ஆகயோரை கடும் துப்பாக்கி சண்டைக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் 5 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
யோகஷை தவிர்த்து மற்ற 4 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது. எனவே இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று க்யூ பிரிவு போலீசார் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து முருகானந்தம், பாலமுருகன், லெனின்குமார், மகாலிங்கம் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தேனி மாவட்ட கெலக்டர் சிரு உத்தரவிட்டார். பின்னர் 4 பேரும் அச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.