கொடைக்கானலில் பெண் உள்பட 5 நக்ஸல்கள் சிக்கினர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 நக்ஸல்களை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்ப முயன்றனர். ஆனாலும் போலீசார் அவர்களை விரட்டிச் செனறு மடக்கிப் பிடித்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முருகமலை காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்து ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட நக்ஸல்களை
போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நக்ஸலைட்டுகள் தமிழகத்தில் பல இடங்களில் குழுக்களாக பிரிந்து பதுங்கி இருந்து தெரிய வந்தது. இதையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது அதிரடிப் படை.
இதில் ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு மலைப் பகுதியில் பதுங்கி இருந்த நகஸ்லைட்டுகள் பிடிபட்டனர்.
இந் நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதியில் நக்ஸல்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு தீவிர வேட்டை நடந்து வருகிறது.
ஏ.டி.ஜி.பி. விஜயகுமாரும் அங்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். மலைக் கிராமங்களில் அதிரப் படை போலீசார் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் உள்ள ஒரு வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு பெண் உள்ளிட்ட 5 நக்ஸல்கள் போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி நிலை குலையச் செய்துவிட்டு தப்பியோடினர். இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார்.
இருப்பினும் சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை விரட்டிச் செனறு மடக்கிப் பிடித்தனர். ஆனால், பெண் மட்டும் தப்பியோடிவிட்டார்.
இந் நிலையில் அந்தப் பெண் மீண்டும் கோம்பை பகுதிக்கு திரும்பி வந்தார். அவரை அப் பகுதி மக்களே வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து, தான் கேரளாவை சேர்ந்தவர் என்றும், தன்னை நக்ஸல்கள் கடத்தி வந்து வீட்டில் அடைத்து வைத்ததாகவும் கூறினார்.
இதையடுத்து அவரை அப் பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்டவர்கள் விவரம்: பாலமுருகன் (19), முனியப்பன் (27), சேவகன் (37). இவர்கள் பள்ளங்கி கோம்பை மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர கேரளத்தைச் சேர்ந்த சந்திரன் (18), தப்பியோடி திரும்பி வந்த மல்லிகா ஆகியோர். இதில் மல்லிகாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி எனத் தெரியவந்துள்ளது.
இவரும் நக்ஸல் இயக்க உறுப்பினரே. ஆனால், தப்புவதற்காக தன்னை நக்ஸல்கள் கடத்தி வந்ததாகக் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வங்கிக் கணக்கில் மேலும் ரூபாய் 6,000.. BLO ஊதியம் டபுள் மடங்கு ஆனது.. ஊக்கத்தொகையும் உயர்வு! -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications