கைதி கணேசன் சென்னை புழல் சிறைக்கு மாற்றம்
வேலூர்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி கணேசன், நேற்று புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
கற்பழிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணேசன், தனது மனைவி நதியாவை சிறை துணை ஜெயிலர் உள்ளிட்டோர் கற்பழித்து விட்டதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது நதியாவுக்கு திருமணமே ஆகவில்லை என்றும், அவர் கன்னி கழியாதவர் என்றும் போலீஸ் மற்றும் நதியாவின் தாயார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கணேசன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை சித்திரவதை செய்து வருகின்றனர் என்றும் கூறி அவரது வக்கீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க வேலூர் மாவட்ட நீதிபதிக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வேலூர் நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கணேசன் சித்திரவதை செய்யப்படுவது உண்மை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கணேசனை உடனடியாக வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை, தரமான உணவு வழங்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நேற்று வேலூர் சிறையிலிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு கைதி கணேசன் மாற்றப்பட்டார்.












Click it and Unblock the Notifications