நடிகையிடம் குறும்பு - மாஜி அமைச்சர் மீது 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

சென்னையிலிருந்து இருந்து கடந்த 2006-ம் ஆண்டு கொச்சிக்கு சென்றபோது நடிகை லட்சுமி கோபகுமார் என்பவரிடம் அப்போதைய கேரள மந்திரி பி.ஜெ.ஜோசப் குறும்பு செய்ததாக பரபரப்பு புகார் கிளம்பியது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸிலும், கேரளாவிலும் புகார் செய்தார் லட்சுமி. இந்த விவாகரத்தால் ஜோசப் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஜோசப் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் முகிலின், விமான நிறுவன ஏர் ஹோஸ்டஸ்கள் உள்பட 25 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.
தற்போது இவ்வழக்கில் ஜோசப் மீது 100 பக்க குற்றப்பத்திரிக்கையை போலீஸார் தாக்கல் செய்துள்ளனர்.
22 சாட்சிகளின் ஒப்புதல் வாக்குமூலமும் இதில் இடம் பெற்றுள்ளது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும், வருகிற ஏப்ரல் 29ம் தேதியன்று ஜோசப் நேரில் ஆஜராகி நகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications