தா.கி.: அழகிரிக்கு எதிராக முத்துராமலிங்கம் சாட்சியம்
சித்தூர்: தா.கிருட்டிணன் கொலை வழக்கில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரிக்கு எதிராக சித்தூர் கோர்ட்டில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் இன்று சாட்சியம் அளித்தார்.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்பட குற்றம் சாட்டப்பட்டுல்ள 13 பேரும் ஆஜராகினர்.
அப்போது 14வது அரசு சாட்சியான திருமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ முத்துராமலிங்கம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அப்போது தா.கியுடன் கொண்டிருந்த அரசியல் முன்விரோதம் காரணமாகவே இந்தக் குற்றத்தை அழகிரி செய்தார் என்று சாட்சியம் அளித்தார் முத்துராமலிங்கம்.
முத்துராமலிங்கத்தின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இன்று நீதிமன்றத்திற்கு வந்த முத்துராமலிங்கத்துடன் 30க்கும் மேற்பட்ட அதிமுக வக்கீல்கள் உடன் வந்திருந்தனர்.