திருச்சானூர் கோவிலுக்கு ரூ.2 கோடியில் புதிய தங்கத்தேர்
திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயில் உற்சவத்தையொட்டி ரூ.2 கோடி செலவில் புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத் தேர் உலா நடந்தது.
திருமலை தேவஸ்தானத்துக்குட்பட்ட திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. 2 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த தேரில் 22 கிலோ தங்கம், 1022 கிலோ செம்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
20 அடி உயரத்துக்கு பிரமாண்டமாகவும் கண்ணைப் பறிக்கும் சிற்ப வேலைப்பாட்டுடனும் அழகாக வடிவமைக்கப்பட்டுளளது.
பத்மாவதி தாயார் கோயிலில் இன்று உற்சவம் நடந்தது. அப்போது புதிய தங்கத்தேரில் பத்மாவதி தாயார் சிலையை வைத்து வீதிஉலா நடந்தது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்கள் பரவசமுடன் வடம் பிடித்தனர். ஆஸ்தான மண்டபம் வரை தேர் சுற்றிவந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருப்பதி திருமலை தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications