Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியர்களுக்கு விசா: யுகே புதிய நடைமுறை அமல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: உயர்நிலை தொழில் திறன் படைத்தவர்களுக்கான 'டயர்- ஒன்' விசா திட்டத்தை முதன்முறையாக இந்தியர்களிடம் இங்கிலாந்து அறிமுகப்படுத்தியுள்ளது.

சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டு குடியுரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு விசா விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 5 அடுக்கு விசா முறையை இங்கிலாந்து வெளியுறவுத்துறை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி இந்தியாவுக்கான இங்கிலாந்து ஹைகமிஷனர் சர் ரிச்சர்டு ஸ்டாக் கூறுகையில்,"

டயர் 1- பாயிண்ட் அடிப்படையில் சாப்ட்வேர் போன்ற உயர் தொழில்திறன் நிபுணர்களுக்கானது. படித்துக் கொண்டே வேலையும் பார்க்க அனுமதி உண்டு.

டயர் 2 - அனுபவம் வாய்ந்த தொழில் நிபுணர்களின் வேலைவாய்ப்புக்கானது.

டயர் 3 - இங்கிலாந்து மற்றும் ஐரோப்பியர்களால் நிரப்பமுடியாதபட்சத்தில் கீழ்மட்ட வேலைகளுக்கான குடியேற்ற அனுமதிக்கானது.

டயர் 4 - மாணவர்களுக்கானது.

டயர் 5 - தற்காலிக தொழிலாளர்களுக்கானது.

ஆகிய 5 வகையான விசா நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் வகையான டயர் 1 பாயிண்ட் அடிப்படையிலானது. முதன்முறையாக இந்தியர்களுக்காக ஏப்ரல் 1 முதல் ஓராண்டுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி, முந்தைய வருவாய், வயது, இங்கிலாந்தில் முன்அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் பாயிண்டுகள் நிர்ணயிக்கப்படும். குறிப்பிட்ட பாயிண்ட் அடிப்படையில் விசா வழங்கப்படும். இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம். எனவே இந்த டயர் 1 விசா நடைமுறைமூலம் இந்தியர்கள் அதிகம்பேருக்கு இங்கிலாந்து விசா கிடைக்கும் வாய்ப்புள்ளது.

டயர் 2 மற்றும் 5 2008 செப்டம்பர்வாக்கிலும், டயர் 4 அடுத்தாண்டிலும் அமல்படுத்தப்படும்.

டயர் 3 தேவைப்படும் போது வழங்கப்படும்."

இவ்வாறு அவர் கூறினார்.


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+