For Daily Alerts
Just In
10ம் தேதி கர்நாடக பந்த்-பாஜக முழு ஆதரவு
பெங்களூர்: ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் விடுத்துள்ள அழைப்புக்கு பாஜக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவரும் 7 நாள் முதல்வரும் ஓகேனக்கல் பிரச்சனையை தூண்டி விட்டவருமான எடியூரப்பா கூறுகையில்,
ஓகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடகத்தில் வரும் 10ம் தேதி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக ஆதரவு அளிக்கும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்தை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றார்.
ஓகேனக்கல் குறித்து இத்தனை ஆண்டுகள் ஏதும் பேசாமல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் இதை எதியூரப்பா கிளப்பிவிட்டது நினைவுகூறத்தக்கது.
Comments
Story first published: Friday, April 4, 2008, 11:18 [IST]