For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி பாஸ்போர்ட் - சென்னையில் 3 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: போலி பாஸ்போர்ட் மூலம் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளையும் சோதனை செய்தனர்.

அதில வந்த 3 வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், கடலூரைச் சேர்ந்த சரவணன் (34), அவரது உறவினர் ராஜேஷ்குமார் (20), மற்றும் திருச்சியைச் சேர்ந்த தீர்த்தகிரி (26) என்பது தெரியவந்தது.

மலேசியாவில் உள்ள கிளவுஸ் கம்பெனிக்கு 3 மாதங்களுக்கு முன் இவர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். ஆனால் கூறப்பட்ட சம்பளத்தை நிர்வாகம் கொடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு திரும்ப 3 பேரும் முடிவு செய்தனர்.

அவர்களின் பாஸ்போர்ட்டை தர ஏஜென்ட் மறுத்துவிட்டதால் போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை வழியாக சென்னைக்கு திரும்பியதாக தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X