ஏட்டின் செல்போனை திருடிய பெண் எஸ்.ஐ. கைது
கிருஷ்ணகிரி: திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் தலைமைக் காவலரின் காமிரா செல்போனை திருடியதாக பெண் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை எஸ்.பி. அலுவலகத்தில் பணிபுரியும் ஏட்டு நிர்மல்குமாரின் செல்போன் கடந்த சில மாதங்களுக்கு முன் காணாமல் போனது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில், சம்பவ தினத்தன்று எஸ்.பி. அலுவலக வரவேற்பு அறைக்கு வந்து சென்ற திருவண்ணாமலை போலீஸ் கட்டுப்பாட்டு அறை பெண் எஸ்.ஐ. தீபா செல்போனை திருடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
திருடிய செல்போனை சென்னையில் வேலை பார்க்கும் கணவர் கோவிந்தனிடம் கொடுத்து வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த செல்போனை பறிமுதல் செய்து எஸ்.ஐ. தீபாவையும், கோவிந்தனையும் போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். எஸ்.ஐ. தீபா சென்னையில் வேலை செய்தபோது அவர் பல்வேறு புகார்களில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications