ஓகேனக்கல்-கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு
சென்னை: ஓகேனக்கல் பிரச்னையில் தமிழக முதல்வரின் முடிவை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்,
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட கட்டுமான பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. அரசியல் ஆதாயத்துக்காகவும், கர்நாடக தேர்தலை மையமாக வைத்தும் அங்குள்ள பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டதால் இரு மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டே கர்நாடகத்தில் புதிய ஆட்சி வரும வரை காத்திருப்போம். 1998ம் ஆண்டு ஒப்பந்தப்படி இத்திட்டம் நடைபெறும், நடப்பதற்கு வலியுறுத்துவோம்என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
இது சுமூகமான சூழலை உருவாக்க உதவி செய்யும். கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இத்திட்டத்தை நிறைவேற்ற உறுதியாக தலையிட மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்தும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications