கோவை சித்தி விநாயகர் கோவிலை இடிக்க எதிர்ப்பு!

கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் நடைபாதை அருகே பல ஆண்டுகளுக்கு முன் சித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஆண்டுக்கு சுமார் ரூ 10 லட்சம் வரை உண்டியல் வசூல் ஆகிறது.
இந் நிலையில் இந்த கோவில் போக்குவரத்துற்கு இடைஞ்சலாக உள்ளதாகக் கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதை இடிக்க முயன்று வருகின்றனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இதையடுத்து கோவில் நிர்வாக குழு, ஆன்மீக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது இந்துக்கள் அதிகமாக வாழும் கோவையில் அதிலும் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கோவிலை இடிக்க உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறன்றது.
தில் அரசியல் பார்க்காமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும். மேலும் கோவிலை இடிக்கும் உத்தரவை கண்டித்து ஆர்பாட்டம், உண்ணாவிரதம், தொடர் போராட்டம் போன்றவைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications