போலீசுக்கு இ-மெயிலில் புகார் அனுப்பலாம்-டிஜிபி
மதுரை: போலீசாருக்கு பொது மக்கள் தங்கள் புகாரை இ-மெயிலில் அனுப்பலாம் என தமிழக டிஜிபி ஜெயின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழக போலீசாருக்கான வெப்சைட் மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது.
எல்லா கமிஷ்னர் அலுவலகங்களிலும் இ-கவர்னன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் படிப்படியாக இந்த வசதி அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த வசதி மூலம் பொது மக்கள் தங்களது குறைகளையும், புகார்களையும் காவல் துறைக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.
இந்த புகார் மீது போலீசார் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். தென் மாவட்ட மலைப் பகுதியிகளில் தற்போது நக்சலைட்கள் நடமாட்டம் இல்லை.
தமிழ போலீசில் தேவையான அளவு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளனர். இது தவிர அனைத்து போலீசாருக்கும் சிறப்பு அதிரடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
ஓகேனக்கல் பிரச்சனையில் ஒசூர் பஸ் எரிப்பு சம்பவம் வேதனை தருகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யார் தவறு செய்தாலும் கட்சி பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.