சத்யராஜ் கொடும்பாவி எரிப்பு - ரஜினி ரசிகர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ரஜினிகாந்த் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை ஏன் வணங்க வேண்டும் என்று பேசிய நடிகர் சத்யராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் அருகே ரஜினி ரசிகர்கள் சத்யராஜின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தினர். இதையடுத்து 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்ன்னை உண்ணாவிரதப் போராட்டத்தின்போது சத்யராஜ் படு ஆவேசமாக பேசினார். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கும்போது ராகேவந்திரா எதற்கு, ராமன் எதற்கு என்று கோபமாக கேட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகர் அருகே பந்தல்குடி சாலையில் ரஜினி ரசிகர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தினர். கூடவே எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ் ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன.
இதையடுத்து 12 பேரை போலீஸார் கைது செய்தனர். மானாமதுரை பகுதியிலும் சத்யராஜைக் கண்டித்து ரஜினி ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.












Click it and Unblock the Notifications