For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீ கடைகளில் இரட்டை குவளை- வி.சி.கண்டணம்

By Staff
Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்ட டீக்கடைகளில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதாகவும், இதில் அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அமைப்பாளர் ஆறுமுகம் கூறுகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில், இன்றும் டீ கடைகளில் இரட்டைக் குவளை முறை உள்ளது. தலித் மக்களுக்கென்று தனி டம்ளர் பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கதக்கது.

மேலும், பல கிராங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு போட அனுமதி மறுக்கப்படுகிறது. கிராமங்களில் பொது இடத்தில் அமர உரிமை இல்லை. பஸ்களில் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் கூறியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. தமிழக அரசு நேரிடையாக இதில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X