தர்மபுரியில் 10ம் தேதி விஜய்காந்த் ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓகேனக்கல் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து வரும் 10ம் தேதி தர்மபுரியில் தேமுதிக தலைவர் விஜய்காந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து 10ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நடை பெறும் ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்குகிறார்.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகிப்பார்கள்.
சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரனும், திருச்சியில் கு.ப.கிருஷ்ணனும், நெல்லையில் ஆஸ்டினும், வேலூரில் சுதீசும் போராட்டத்துக்கு தலைமை தாங்குவார்கள்.
மற்ற மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ள மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.