தப்பு பண்ணிட்டேன்: பதவி போனதால் தாசரி வருத்தம்
ஹைதராபாத்: பேசாமல் சினிமாவிலேயே இருந்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசியலுக்குப் போனது நான் செய்த பெரிய தவறு என்று சமீபத்தில் மத்திய அமைச்சர் பதவியை இழந்த தாசரி நாராயண ராவ் கூறியுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் பிரபல இயக்குநர், தயாரிப்பாளர் தாசரி நாராயண ராவ். காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்தியில் இணை அமைச்சராகவும் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இவரது பதவியை காங்கிரஸ் மேலிடம் காலி செய்தது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஹைதராபாத் திரும்பியுள்ள தாசரி, தான் அரசியலில் நுழைந்தது தான் செய்த மிகப் பெரிய தவறு என்று புலம்பியுள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதியில், இயக்குநர் கே.பாலச்சந்தருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு பேசுகையில்தான் இப்படி வருத்தப்பட்டார் தாசரி.
தாசரி பேசுகையில், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தபின், பெரிய அளவில் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலில் நுழைந்து நான் வாழ்க்கையில் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன்.
இனி நான் மீண்டும் திரைப்படங்களை இயக்க உள்ளேன். தென்னிந்திய திரைப்படத் துறையினரை வட மாநில திரைத் துறையினர் அவமரியாதையுடன் நடத்துகின்றனர்.
தென்னிந்திய திரைத் துறையில் புகழ் பெற்ற திறமைசாலிகள் நல்ல வெற்றி படங்களை அளித்துள்ளனர். திறமையான இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் திரைப்படத் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் பலர் இருந்தும் என்ன காரணத்தாலோ தென்னிந்திய திரைப்படத்துறைக்கு மதிப்பும், மரியாதையும் கிடைப்பது அரிதாக உள்ளது.
எனக்குப் பதவின போனது குறித்து கவலை இல்லை. பதவி என்றால் அது வரும், போகும். ஆனால் சினிமாத் துறையினர் எப்போதும் மாஜி ஆக மாட்டார்கள் என்றார் தாசரி.
கவர்ச்சி நடிகை முமைத்கான் படு கவர்ச்சியாக தெலுங்கில் நடித்து தமிழுக்கு டப் ஆகியுள்ள காயத்ரி ஐபிஎஸ் படத்திற்கு தாசரிதான் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். அவரது மனைவி தாசரி பத்மாதான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications