போதையில் வாலிபரை வெட்டிய ஜெயில் வார்டன்
நாகர்கோவில்: போதையில் நண்பரை அரிவாளால் வெட்டிய ஜெயில் வார்டன் உள்பட 4 பேர் மீது போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்தவர் மரிய மகேஷ். நாகர்கோவில் சப்ஜெயில் வார்டனாக வேலை செய்து வருகிறார். அதேப் பகுதியைச் சேர்ந்த காந்தி, ஆன்டனி மில்டன், அம்பரோஸ் ஆகிய நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு 4 பேரும் மது அருந்தினர். போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த மரிய மகேஷும், காந்தியும் அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலருடன் சேர்ந்து அம்பரோசை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பினர். அம்பரோசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார்.
பின்னர் அவரை ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஜெயில் வார்டன் மரிய மகேஷ், காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications