டெல்லி ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்: பி.டி.உஷா உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லி: டெல்லியில் ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டத்தில் தடகள ராணி பி.டி.உஷா, துப்பாக்கி சுடும் வீரர்கள் அபினவ் பிந்த்ரா, மனவ்ஜித் சிங் சந்து, பளு தூக்கும் வீரர் ராஜீந்தர் சிங் ரஹேலு ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியையொட்டி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கும் ஒலிம்பிக் ஜோதி ஏப்ரல் 17ம் தேதி டெல்லி வருகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் நடைபெறும் ஜோதி ஓட்டத்தில் மேற்கண்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர சரோத் கலைஞர் அயான் அலி கான், சக்தே படப் புகழ் சாகரிகா காட்கே ஆகியோரும் பங்கேற்பார்கள்.
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து பி.டி.உஷா கூறுகையில், நான் மிகவும் கெளரவம் அடைந்துள்ளேன். எனது தாய் நாட்டுக்காக இதை நான் செய்வேன். உண்மையான விளையாட்டு வீராங்கனையாக, சந்தோஷத்துடன் இந்த வாய்ப்பை ஏற்கிறேன் என்றார்.