ஏழுமலையானுக்கு ரூ.1.30 கோடி தங்க ஆரம் காணிக்கை
Subscribe to Oneindia Tamil
திருமலை: திருப்பதி வேங்கடாஜலபதிக்கு ரூ.1.30 கோடி மதிப்பிலான அழகிய தங்ககாசு மாலையை ஹைதராபாத் பக்தர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ராஜேந்தர். திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தர். ரூ.1.30 கோடி செலவில் செய்யப்பட்ட தங்க ஆரத்தை சுவாமிக்கு இன்று காணிக்கையாக வழங்கினார். மகாலட்சுமி திருவுருவம் பொறிக்கப்பட்ட அழகிய தங்க காசுகள் கோர்க்கப்பட்ட இந்த ஆரம் 12.5 கிலோ எடையில் செய்யப்பட்டிருந்தது.
திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தர்மா ரெட்டி முன்னிலையில் கோயில் குருக்களிடம் தங்க ஆரத்தை பக்தர் ராஜேந்தர் ஒப்படைத்தார்.












Click it and Unblock the Notifications