தொழில் வள சாலையாகும் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை
சென்னை: சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துமாறு முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுதிய நேர்முகக் கடிதத்தில் டெல்லியிலிருந்து மும்பை வரை செல்லும் நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக உருவாக்கிட மத்திய அரசு அறிவித்துள்ளது போல்,
சென்னை- பெங்களூர் இடையிலான நெடுஞ்சாலையையும் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவித்து அதை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நெடுஞ்சாலையைத் தொழில் வள நெடுஞ்சாலையாக அறிவிப்பதன் மூலம் இந்த நெடுஞ்சாலை முழுவதிலும் உலகத் தரத்திற்கு இணையான கட்டமைப்பு வசதிகள் உருவாக வழி வகுக்கும்.
அத்துடன், இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சி தொடர்ந்து நிலைபெறவும், மேலும் மேம்படவும் உதவும் என்றும் தமிழக அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், முதல்வர் கருணாநிதி விடுத்த கோரிக்கையை ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் தமிழக அரசுக்கு கடந்த 1ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையை ஒரு தொழில் வள நெடுஞ்சாலையாக மேம்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகள் உள்ளதாகவும், இத்திட்டம் மும்பை வரை நீட்டிக்கப்படுமாயின் மேலும் பயன்தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை- பெங்களூர்- மும்பை தொழில் வள நெடுஞ்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து தொடர்புடைய மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு ஒரு கொள்கை அறிக்கையைத் தயாரிக்கும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
திமுக கூட்டணியில் 7 சீட்டா? எந்தெந்த தொகுதிகள்? நாளை மேஜர் மீட்டிங்.. இறுதி முடிவெடுக்கும் விசிக! -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு?












Click it and Unblock the Notifications