136 அடியை நெருங்குகிறது முல்லைப் பெரியாறு அணை
மதுரை: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 131 அடியைத் தாண்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் 136 அடியை அது எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக, கேரள எல்லையில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணை தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
அணையில் தற்போது 136 அடி வரை மட்டுமே தண்ணீரைத் தேக்க கேரள அரசு அனுமதிக்கிறது. ஆனால் 142 அடி வரை தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை ஒன்றுமில்லாமல் போகச் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது கேரள அரசு.
வழக்கமாக கோடை காலத்தில் முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியதில்லை. ஆனால் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 131.20 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 544 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
இதனால் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக கோடை காலத்தில் 136 அடியை முல்லைப் பெரியாறு அணை இன்னும் சில நாட்களில் எட்டும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications