சீனாவைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: திபெத் போராட்டத்தை அடக்குமுறையால் அடக்க முயலும் சீன அரசைக் கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் நான்சி பலோசி கொண்டு வந்தார். தீர்மானத்திற்கு ஆதரவாக 413 பேரும், எதிர்த்து ஒருவரும் வாக்களித்தனர்.

தீர்மானத்தைக் கொண்டு வந்து பலோசி பேசுகையில், சீன சட்ட திட்டங்களை எதிர்த்தும், சீன அரசின் கொள்கைகளை எதிர்த்தும் திபெத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சீன அரசின் கொள்கைகளும், சட்டங்களும், தங்களது மொழி, கலாச்சாரம், மத அடையாளம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக திபெத்தியர்கள் கருதுகிறார்கள், கவலைப்படுகிறார்கள்.

ஆனால் இதை சீன அரசு கவனத்தில் கொள்ள மறுக்கிறது. இதை விட மோசமாக, ஒலிம்பிக் ஜோதியை திபெத் வழியாக கொண்டு செல்லவும் அது முயலுகிறது. இதை உலக சமுதாயம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

திபெத்தியர்களின் போராட்டத்ைத வன்முறையால் அடக்க முயலுவதை சீன அரசு நிறுத்த வேண்டும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல செனட் சபையிலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தில் எதிர்காலத்தில் அமெரிக்காவில் சீன அரசு தனது தூதரக அலுவலகங்களைத் திறக்க வேண்டுமானால், திபெத் தலைநகர் லாசாவில் அமெரிக்கா தனது தூதரக அலுவலகத்ைதத் திறக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என சீன அரசை அமெரிக்க அரசு வலியுறுத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் கூறுகையில், திபெத்தில் அமெரிக்கா தனது துணைத் தூதரகத்தை தொடங்க விரும்புகிறது. இதன் மூலம் திபெத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்காவில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

திபெத்தில் துணைத் தூதரகத்தை அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+