ராகுல் காந்தி பிரதமராக கருணாநிதி ஆதரவு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி பேசினார். அப்போது ராகுல் காந்தி பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும். அப்பதவிக்கு அவர் பொருத்தமானவர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் ஆகியோர் கூறியுள்ளனரே என்று கேட்டபோது, தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சிதான் என்றார் முதல்வர்.

தொடர்ந்து முதல்வர் பேசுகையில், கிரீமி லேயர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என்று கூறி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

திமுக உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் இட ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசுவோம் என்றார் கருணாநிதி.

ராகுல் பூச்சாண்டி எடுபடாது-பாஜக

இதற்கிடையே பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிப்பதால் காங்கிரசுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஜெய்ப்பூரில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறுகையில்,

பிரதமர் வேட்பாளராக ராகுலை நிறுத்தி சில காங்கிரஸ் தலைவர்களும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவருகளும் பூச்சாண்டி காட்டுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படாது.

ராகுல் காந்தியை கொண்டு வந்துவிட்டால் எல்லாமே தலைகீழாகி அவர்களுக்கு பலன் கிடைத்துவிடுவதுபோல் பேசுகிறார்கள். அவரை முன்னிறுத்துவதால் என்ன நடந்துவிடும் என்பதுதான் எனக்குப் புரியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+